நீலம் நிதிநல்கை -2024 இன் படி இருபதாயிரம் ரூபாய் பரிசு பெறும் படைப்புகள்
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் நீலம் மாத இதழ் மற்றும் பதிப்பகம் தொடங்கி பல்வேறு படைப்புகளை வெளிக்கொணர்ந்து வருகிறார். நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அப்படைப்புகளை எழுதிய படைப்பாளர்களுக்கு தலா உரூபாய் இருபதாயிரம் வீதம் நிதி உதவி செய்வதாக அறிவித்து படைப்புகள் கேட்டிருந்தார்.
நீலம் நிதிநல்கை -2024 உதவி பெறும் படைப்புகளாக ஐந்து குறுநாவல்களும் இரண்டு ஆய்வு கட்டுரைகளும் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பைச் சமூக வலைதளம் வழியே அறியமுடிந்தது. இந்த அறிவிப்பை தண்டோரா வலைப்பக்கம் மேலும் பலருக்கு அறிவிக்கிறது.
குறுநாவல்கள்
ஒட்டாரம்- சக்திவேல் ராமன்
தளவாய் தீட்டு - மீனா சுந்தர்
இடுக்கண் படினும் - நிர்மல்
மையெருமை- அலையாத்தி செந்தில்
ஊர்கஞ்சி- மு.தா. அன்பழகன்
ஆய்வுக் கட்டுரைகள்
பயண இலக்கியத்தில் சமூக மதிப்பீடுகள் - ஜா. அருள் சுனிலா
பா. இரஞ்சித்தின் திரைப்படங்கள் ஓர் ஆய்வு - அ. பிரசாந்த்
படைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்,,,
மேலும் பல இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் அறிய முகப்பு பக்கத்திற்கு வருக,,

கருத்துகள்
கருத்துரையிடுக